About this video
இன்றைய சத்சங்கத்தின் சாரம்! ஆதிசைவம் - 09-அக்டோபர்-2019 *நித்யானந்தேஸ்வர பரமசிவ சமாரம்பாம் நித்யானந்தேஸ்வரி பராசக்தி மத்யமாம் அஸ்மதாச்சார்ய பர்யந்தாம் வந்தே குருபரம்பராம்... *உங்கள் அனைவரையும் வணங்கி வரவேற்கின்றேன்.. *ஆழ்ந்து கேளுங்கள்.. இந்த ஒரே ஒரு சத்தியத்தை சொல்வதற்காக நான் ஒரு இன்னொரு பிறவியே எடுத்து வந்தாலும் பராவாயில்லை எனுமளவிற்கு ஆழமான சத்தியம். *ஒரு நீண்ட ஆழ்ந்த சமாதியில் நான் லயித்திருந்தபொழுது இந்த ஒரே ஒரு சத்தியத்தை, என் யுவராஜாக்கள், யுவராணிகள், பிரம்மச்சாரிகள், சன்யாசிகள், சுவாமிகள் உங்களனைவருக்கும் சொல்வதற்காகவாவது பதிவிறம் செய்துகொண்டிந்தேன்! *நீளம் - அகலம் - ஆழம் - காலம் - ஆகாசம் போன்றவவைகள் எப்படி இந்தப் பிரபஞ்சத்தின் வேறு வேறு பரிமாணங்களோ அதேபோல 'நித்யத்துவம்' இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு பரிமாணம் *ஜீவன் - தனி உயிர் ஈஸ்வரன - பரம்பொருள் ஜகத் - பிரபஞ்சம் இது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்த, இது எல்லாவற்றிற்கும் அடிப்படையாக நித்யத்துவம் நிரந்தரமான இருப்பு நிலை உண்டு. *ஓவ்வொரு பிரபஞ்ச சத்தியதை நீங்கள் உணரும்பொழும் உங்கள் வாழ்க்கை சக்தி பெற்றதாக மலரும். உயிர்ப்பு பெற்றதாக மலரும். *பிரபஞ்சத்தின் சத்தியத்தினை உள்வாங்கி அதனால் நீங்கள் மாறத்துவங்கினால் வரும் பலம் தெய்வபலம்! மற்றவற்றைச் சார்ந்து வரும் பலம் அசுரபலம். *நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள்.. நித்யத்துவம் பிரபஞ்சத்தின் மிகப்பேருண்மைகளாக பரமசிவக்ஞானம் சார்ந்து நீங்கள் வெளிப்படுத்தும் சக்திகள் எல்லாம் நிரந்தரமானவை. உங்கள் வாழ்க்கையில் எல்லா திட்டங்களும், நோக்கங்களும் நிரந்தரமான சத்தியங்களைச் சார்த்து இருக்குமானால் வாழ்க்கை நிரந்தரமாக முழுமைத்தன்மையோடு இருக்கும். *சாதாரண தனிமனித ஒழுக்கத்தையோ, அல்லது சமூக நலத்தையோ, அல்லது சாதாரண ஒரு செல்வம் திரட்டும் வழியையோ, அல்லது சாதாரண ஒரு தன்னம்பிக்கை கருத்தையோ சொல்வதற்காக நான் வரவில்லை! நான் சொல்வது சுத்தமான பரமசிவக்ஞானம். நான் சொல்லுகின்ற மூலம் பரமசிவக்ஞானம். *2002ல் தமிழில் குமுதம் என்று ஒரு பத்திரிக்கை இருக்கும்.. 2002ல் இருந்து 2010 வரை தொடர்ந்து 8 ஆண்டுகள், தமிழ்ப் பத்திரிக்கை தொடரிலேயே நீண்ட நெடுந்தொடராக வந்தது நான் எழுதிய கதவைத்திற காற்று வரட்டும், மனதைத்திற மகிழ்ச்சி பொங்கட்டும், ஆன்மாவைத்திற ஆனந்தம் பெருகட்டும் தொடர்தான்! அதை எல்லோரும் தன்னம்பிக்கைத்தொடர்.. மன உத்சாகத் தொடர் என்றெல்லாம் சொல்வார்கள், இவை எல்லாம் நான் சொல்கின்ற கருத்திற்கு பக்க விளைவாக இருக்கலாம் ஆனால் நான் சொல்கின்ற கருத்திற்கு நேர் விளைவு- உங்களுக்குள் பரமசிவக்ஞானத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான். 2002 ல் இருந்து இன்றுவரை அதைமட்டும்தான் குறிக்கோளாகக்கொண்டு, அதைச்சார்ந்தே எழுதிக்கொண்டிருக்கின்றேன். நான் சொன்ன, சொல்லுகின்ற அனைத்தும் பரமசிவக்ஞானம், பரமசிவ விக்ஞானம். *இந்த ஒரு சத்தியத்தை தியானிக்கவும், சிந்திக்கவும் துவங்கினீர்களானால் உங்களுக்குள் அழியாக ஒன்று இருக்கின்றது என்ற தேடுதலைத் துவங்கினீர்களானல், அது உண்மைதானா? பொய்யா? என்கிற ஆராய்ச்சியைத் துவங்கினீர்களால் முதலில் நடைபெறுவது உங்கள் உடல் நலம் பெறும்! ஆரோக்கியம் அல்ல! ஆ-ரோக்கியம் என்பது ரோகம் இல்லாத நிலை, அது மாத்திரம் அல்ல. உடல் நலம் பெறும் *நினைவிலும், கனவிலும், உறக்கத்திலும், மறப்பிலும், நினைப்பிலும் உயிர்ப்பிலும் மன அழுத்தத்திலும் எதோ ஒன்று உங்களை இனைத்து 'நான்' என்கின்ற இருப்பாக ஸ்புரித்துக்கொண்டே இருப்பது சத்தியம்! இரமண மகரிஷி மிக அழகான வார்த்தையை உபயோகிப்பார், அகம் ஸ்புரணம் என்று சொல்வார். ஆத்ம ஸ்புரணம் என்று சொல்வார். அகம் - அகம் என்று நமக்குள் ஸ்புரித்துக்கொண்ட இருக்கும் சத்தியம். அது நித்யமானது! *நித்யமானது ஒன்று இருக்கிறது என்று நாம் சிநித்திக்க துவங்கினாலே பயத்தாக்குதல் குறைந்துவிடும். தொடர்ந்து பயத்தாக்குதலினால் ஏற்படுகின்ற மனச்சிதைவு, கொடுமை என்னவென்றால், ஆண்கள் எல்லாம் மதுவினலும், பெண்கள் எல்லாம் டீவி சீரியல்களினாலும் 80 சதவிகிதம் பேர் ஏற்கனவே மனச்சிதைவில் உடைந்துவிட்டார்கள். *ஏன் வெடிக்கின்றார்கள் என்று அவர்களுக்கேத் தெரியவில்லை! ஏன் அவர்கள் வாழ்க்கையில் துக்கம் வருகின்றது என்று அவர்களுக்கேத் தெரியவில்லை! எப்படி சிந்திப்பது? என்று தெரியமாலே சிந்திக்கத்துவங்கி, ஏன் சிந்திக்கிறோம்? என்று தெரியாமலே சிந்தித்து, எதைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம்? எப்படி சிந்தனையை நிறுத்துவது? என்று தெரியாமலே சிந்தித்துக்கொண்டிருந்து மனச்சிதைவிற்கு ஆளாகிறார்கள். *ஒரே ஒரு சத்தியம் நமக்குள் அழியாத நித்யமான ஒன்று இருக்கிறது! இந்த ஒரே ஒரு சத்தியத்தை இரவு தூங்கும்பொழுது படுக்கையில் படுத்தவாறே சிந்தியுங்கள்! *நம்முடைய சங்கத்தில் சன்யாசிகள் தவிற அனைவரும் வெற்றிலைப்பாக்கு போட வேண்டும் என்று உத்தரவிடுகின்றேன். வெற்றிலை பாக்கு ஒரு ஒளடதம்! உடலை நலம் செய்யக்கூடிய பொருட்களுக்கு ஒளடதம் என்று பெயர். மணி மந்திரம் ஒளடதம் இந்த மூன்றினாலும் சக்திகள் அடையப்படும்! வெற்றிலைப்பாக்கு போட்டுக்கொண்டே இந்தக் கருத்தை ஆழ்ந்து சிந்தியுங்கள்! Satsang delivered on 9th October 2019 Watch, share and like the videos and Subscribe to our channel to be notified of the next upload. click http://bit.ly/20j90wr to subscribe. Website and Social Media: http://www.kailaasa.org http://www.nithyananda.org http://www.nithyananda.tv http://www.innerawakening.org https://twitter.com/SriNithyananda https://www.facebook.com/ParamahamsaNithyananda